வாக்கு சீட்டில் குளறுபடி! திருவள்ளூர் ஈக்காட்டில் தேர்தல் தற்காலிக நிறுத்தம்!

  • தமிழகத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
  • திருவள்ளூர்  ஈக்காடு ஒன்றியத்தில் வாக்குசீட்டுக்களில் ஏற்பட்ட குளறுபடியால் தேர்தல் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 27 மாவட்டங்களை 156 ஊராட்சி ஒன்றியங்களில்  முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஈக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கான வாக்குசீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி வாக்கு சீட்டினை வீசி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே வாக்குசீட்ட்டில் முத்திரை குத்தப்பட்டதாக  புகார் எழுந்தது. இதனை அடுத்து அங்கு கூட்டம் கூடியது. அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.