மிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்! பால்வளத்துறை அமைச்சர் தகவல்!

உலகப்பொதுமறையான திருக்குறளை திமுக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழக மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை. எனவும், திமுக கட்சியானது, தமிழையும் , திருக்குறளையும் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தததகவும்,
ஆதலால் திருக்குறளை ஆவின் பால்பாக்கெட்டுகளில் அச்சிட்டு பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு சேர்க்கும்படி தமிழக பாஜக தகவல் இணையதள தலைவர் CTR.நிர்மல் குமார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்க்கு டிவிட்டரில்  பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலை பெற்று, ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும். என பதிலளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.