திருச்செந்தூர் கோவிலில் நகைபறிப்பில் ஈடுபட்ட பெண்கள் கைது….!!!

திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நான்கு பெண்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர்கள் நான்கு பெரும் சகோதரிகள் என தெரிய வந்தது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விழாவில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரு பெண்ணிடம் 41/2 பவுன் நகையை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 4 போரையும் போலீசார் கைதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment