பணத்தை திருடிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்த திருடன்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு அருகில் காரில் இருந்து 2லட்சம் ரூபாய் பணத்தை திருடிய திருடன் துள்ளி குதித்து செல்லும் காட்சிகள் வெளியானது.

ஜோதியம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் குண்டடம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றார். அப்பொழுது அவரின் காரில் இருந்த 2லட்சம் பணத்தை காணவில்லை. அதிர்ந்து போன அவர் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்த பொது, பணத்தை கொள்ளை அடித்த திருடன், பணம் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆடினார். அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீஸ், அந்த திருடனை தேடி வருகின்றனர்.