நாடுமுழுவதும் அக்டோபர் 2 முதல் இந்த பொருட்களுக்கு தடை

நாடுமுழுவதும் அக்டோபர் 2 முதல் இந்த பொருட்களுக்கு தடை

நாடு முழுவதும் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 6 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து உலகளவில் கவலைகள் வளர்ந்து வருகின்றன, கடல்களில்  கிட்டத்தட்ட 50%  ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டிக்கிடக்கிறது.இது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மனித உணவு பொருட்களில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன .

இதன் வெளிப்பாடாக ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ஆறு பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தியின் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பிளாஸ்டிக் கப், பை, தட்டுகள்,பாட்டில்கள்,ஸ்ட்ரா மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் ஆகிய 6 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை விரிவானதாக இருக்கும் என்றும் , மேலும் இது போன்ற பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இறக்குமதியை உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube