தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை-திருமாவளவன்

தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்பட்டுவிட போவது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அமித்ஷா நிலைப்பாட்டை எதிர்த்து திமுக போராட்டம் நடத்த உள்ளதை விசிக வரவேற்கிறது. தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்பட்டுவிட போவது இல்லை.

பல கட்சிகள் போராட்டம் நடத்துவதால் மேலும் அது மத்திய அரசை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.மேலும் தமிழக அரசு இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு பொம்மலாட்ட அரசாக   செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.