பாஜக ஆட்சியால் எந்தவித முன்னேற்றமும் இல்லை – ப.சிதம்பரம்

  • குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • பாஜக ஆட்சியால் நாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த விட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், பாஜக ஆட்சியால் நாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை .முத்தலாக் தடை, காஷ்மீரை பிரித்தது, அசாம் குடிமக்கள் பதிவேடு ஆகியவை தான் பாஜகவின் சாதனை ஆகும்.குடிமகன் என்பதற்கு நிலத்தில் வாழ்வதே சாட்சி. இந்திய நாட்டை ஜெர்மன் நாடாக மாற்ற ஒரு கூட்டம் கையில் எடுத்துள்ளது.எனவே நாம் அதை தடுக்க வேண்டும் என்று பேசினார்.