விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பம் இல்லை..! அரசு விளக்கம்..!

விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பம் இல்லை..! அரசு விளக்கம்..!

கோவை சிங்காநல்லூரை சார்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.  கடந்த 11-ம் தேதி வழக்கம் போல காலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் கோல்டுவின்ஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அனுராதா விபத்தில் சிக்கினார். பின்னர் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து காலில் அறுவை சிகிக்சை செய்யப்பட்டு கால் துண்டிக்கப்பட்டது.சாலையில் இருந்த கட்சி கொடி கம்பத்தால் தான் விபத்து நடந்ததாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.அதில் அனுராதா விபத்தில் சிக்கிய இடத்தில் கொடி கம்பம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube