தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது -அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,  2015-ஆம் ஆண்டு ஜூன் முதல்  தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக அம்மா அவர்கள் உருவாக்கி தந்தார்கள்.தமிழகத்தில் எப்பொழுதுமே தேவைக்கு ஏற்றவாறு புதிய மின் உற்பத்தி நிலையங்களாக இருந்தாலும் சரி ,துணை மின் நிலையங்களாக இருந்தாலும் சரி ஆரம்பித்து கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் எதிர்காலத்திலும் மின்வெட்டு பிரச்சினை இருக்காது.தேவையான அளவிற்கு மின்சாரம் உற்பத்தியாகி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.