எல்லா துறைகளிலும் ஆண், பெண் வித்தியாசம் ஒழிய வேண்டும் : நடிகை சமந்தா

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் நாகசைதான்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறக்கும் சமந்தா, தற்போது இவர் ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘இணைய தொடர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சினிமாவில் மட்டுமன்றி எல்லா துறைகளிலும் ஆண், பெண் வித்தியாசம் ஒழிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.