மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கிடையாது-அமைச்சர் ஜெயக்குமார்

  • ஆட்சி நீடிக்குமா என்று திண்ணை பேச்சு பேசியவர்களுக்கு நடுவில் வரலாற்று சாதனை படைத்துள்ளோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  • மேலும்  மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக கழகத்தை ஆரம்பித்து வெற்றி கண்டவர் எம்.ஜி ஆர் புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும், இன்றும் அவர்களது புகழ் நிலைத்து நிற்கும் அளவிற்கு அவர்களது செயல் இருக்கிறது

ஆட்சி நீடிக்குமா என்று திண்ணை பேச்சு பேசியவர்களுக்கு நடுவில் வரலாற்று சாதனை படைத்துள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என்று முதல்வர் கூறினார். எனவே எந்த அச்சமும் தேவையில்லை.மக்கள் விரும்பும் திட்டங்கள் அனைத்தும் மக்களைசென்று கொண்டிப்பதால் சிறுபான்மை மக்களை திசைத்திருப்பும் அரசியல் செய்கிறார்கள் .இது எதார்த்த நிலை அல்ல திமுக போல் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் நிலை அதிமுக விற்கு இல்லை.ரஜினி அதிமுக நாளேடு குறித்து பேசாததற்கு அவரிடம் தான் கேட்க வேண்டும் , நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும். தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதே அதிமுக வின் லட்சியம். மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கிடையாது.தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.