பல துறைகளில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் பணம் வர வேண்டி உள்ளது – தம்பிதுரை

பல துறைகளில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் பணம் வர வேண்டி உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,   நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்.

மத்திய அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை முறையாக வழங்க வேண்டும். பல துறைகளில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் பணம் வர வேண்டி உள்ளது. இப்பொழுது எதற்கும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.மத்திய அரசு எல்லா அதிகாரத்தையும் எடுத்து சென்று விட்டது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Leave a Comment