பிரசவ வழியால் மருத்துவமனைக்கு வந்த பெண்!பின்னர் நடந்த விபரீதம்!ஆத்திரம் அடைந்த உறவினர்!

பிரசவ வழியால் மருத்துவமனைக்கு வந்த பெண்!பின்னர் நடந்த விபரீதம்!ஆத்திரம் அடைந்த உறவினர்!

  • மருத்துவர் இல்லாத காரணத்தால் அங்கு பணியாற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
  • பின்னர் குழந்தையுடன் பெண்ணும் இறந்ததை கேட்ட உறவினர் போராட்டத்தில் இறங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ஆவார்.இவரது மனைவி கீர்த்திகா ஆவார்.இவர் கர்ப்பமாக இருந்ததால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரசவவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் அங்கு வேலை பார்க்கும் செவிலியரே பிரசவம் பார்த்துள்ளனர்.

இதனால் ஆண்குழந்தை இறந்தே பிறந்துள்ளது பின்னர் சிறிது நேரத்தில் கீர்த்திகாவும் உயிரிழந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கீர்த்திகா குடும்பத்தினர் செவிலியர் பிரசவம் பார்த்ததன் காரணமாக தான் கீர்த்திகா உயிரிழந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகவும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

இதனால் கீர்த்திகாவின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube