கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்..!

கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்..!

கேரளா மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம்  28-ம் அதிரடிப்படையிருக்கும் , மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அந்த பெண் மாவோயிஸ்ட்டு யார் என தெரியாமல் இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் கிராமத்தை சார்ந்தவர் அஜிதா என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கச்சென்று உள்ளார்.அதன் பின்னர் மயமான அஜிதா மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube