பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி திட்டதிற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு!

பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி திட்டதிற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்ர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் இதுகுறித்து கூறுகையில், ‘இந்தியாவின் அறிவிப்பு, மிகவும் வரவேற்புக்குரிய நிகழ்வு. வளரும் நாடுகளின் பொருளாதார திட்டங்களில், இதுதான் மிகப்பெரியது ஆகும். இதை அமல்படுத்தும் திறனும் இந்தியாவுக்கு உள்ளது. இத்திட்டத்தின் வடிவமைப்பை பொறுத்து, இதன் தாக்கம் அமையும்.’ என்று தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.