இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் கடைசிவரை இருப்பேன்-எம்எல்ஏ கலைச்செல்வன்

இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் கடைசிவரை இருப்பேன்-எம்எல்ஏ கலைச்செல்வன்

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் கூறுகையில், அதிமுக ஆட்சிக்கு எதிராக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன் என்றும்  இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் கடைசிவரை இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Join our channel google news Youtube