தமிழகம் &புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் மாலை 6 மணியோடு வாக்குப்பதிவுக்கான நேரம் நிறைவடைந்தது

இன்று தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று  வாக்குப்பதிவு  நடைபெற்றது.

Image result for தேர்தல்

இன்று  காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.ஆனால் மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா காரணமாக இன்று  காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் மாலை 6 மணியோடு வாக்குப்பதிவுக்கான நேரம் நிறைவடைந்தது .18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான நேரம் நிறைவடைந்தது.மதுரை தவிர்த்து தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.பின் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெறுகிறது.மேலும் 6 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதேபோல் புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

Leave a Comment