மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் – மத்திய அரசு

புதிய கல்விக்கொள்கை படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மக்களவையில் திமுக எம்.பி.  தமிழச்சி தங்கபாண்டியன் ,தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையை அமல்படுத்தக்கோரி தமிழக அரசிடம் இருந்து ஏதேனும் கோரிக்கை வந்ததா?  என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. நாட்டில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்- மதிய கல்விக்கொள்கை படி 3வது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநில அரசுகள் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.