குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை- தினகரன்

குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று  தீர்ப்பு வழங்கியது.

அதில்  டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

மேலும் “இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் இது தொடர்பாக தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை. குக்கர் சின்னம் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment