மதுரையில் லட்சக்கணக்கான காவியை பார்த்து சூரியன் மறைந்து விட்டது- தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், இன்று மதுரையில் லட்சக்கணக்கான காவியை பார்த்து சூரியன் மறைந்து விட்டது.மதுரையில் தாமரைகள் மலர மலர உதயசூரியன் எங்களை என்ன செய்ய முடியும்…? .. இந்த ஆண்டில் மீண்டும் மோடி பிரதமராக வருவார்.மீண்டும் மோடி, வேண்டும் மோடி தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment