ஸ்டெர்லைட் வழக்கு…எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு…!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் திறந்தாள் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுமென்றும் , வைகோ சார்பில் இந்த ஆலையின் விதிமீறல்கள் குறித்தும் , ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இந்த ஆலை கடைபிடிக்கும் விதிமுறைகள் மற்றும் செய்யும் நலத்திட்ட உதவிகள் குறித்து வாதம் செய்யப்பட்டது.

இதையடுத்து மூன்று தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாக திங்கள் கிழமைக்குள் அளிக்க வேண்டுமென்று கூறி தீர்ப்பை ஒத்து வைத்தது.இந்நிலையில் இன்று தமிழக அரசின் சார்பில் எழுத்து பூர்வமான தகவல் தாக்கல் செய்யப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment