I.P.S அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி…!!

மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு அனைத்து அமைப்புகளையும் சிதைக்க முயற்சிப்பதாகவும் மாநிலங்களில் உள்ள ஐ பி எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை டெல்லி வரை எடுத்துச்செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்து விட்டு குஜராத்துக்கே செல்ல வேண்டும் என மம்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனநாயகத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் தனது தர்ணா போராட்டத்தால் வெற்றி கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment