மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயார் – முதலமைச்சர் பழனிசாமி

ஆவணி பேரூர் பகுதியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதன் பின் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், சரபங்கா நதியின் குறுக்கே பாலம் திறக்கப்பட்டதால், ஒன்றரை கி.மீ சுற்றி சென்ற மருத்துவமனைக்கு தற்போது இரண்டு பர்லாங் கடந்தால் போதும்.மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.