சிறுவன் சுர்ஜித்தை மீட்க மாநில பேரிடர் மீட்பு படை வந்தது..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது  சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு படை வந்தது. மாநில பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட குழு வந்தது.
சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 17 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர். மேலும் மாநில பேரிடர் மீட்பு படையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையும் நடுக்காட்டுபட்டிக்கு வந்து உள்ளனர்.

author avatar
murugan