தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை.! அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு.!

  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று பல்வேறு விவாதங்களை பற்றி பேசினர். அந்த வகையில் இன்று 2ம் நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், அரசு நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையை பல்கலைக்கழக அளவில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற நிலைமையை மாற்றி, மருத்துவியல், கல்வெட்டுயியல், தொல்லியல், வானவியியல் என 10க்கும் மேற்பட்ட துறைகளை தமிழில் நடத்தி வேலை வாய்ப்புக்கான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்