மிசோரத்தில் இந்த வாரத்தில் இரண்டாம் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம்!

மிசோரம் மாநிலத்தில் இன்று மதியம் சுமார் 2.28 மணியளவில் மியான்மார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.3 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உள்ள 31 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் மிசோரத்தில் இந்த வாரத்தில் மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 18 நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது.