வெளி மாநில மின்வாரிய பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது …!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

வெளி மாநில மின்வாரிய பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ஒருவருக்கு கூட தொற்று நோய் ஏற்படவில்லை. சுகாதாரத்துறை சார்பில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 7 லட்சம் மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.வெளி மாநில மின்வாரிய பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் 80சதவீத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது,புயலை காரணம்காட்டி நெடுஞ்சாலை ஓரமுள்ள பசுமை மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment