சென்னையில் சோகம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி..!

சென்னையில் சோகம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி..!

சென்னை ஆவடி அடுத்த சேர்க்காடு அண்ணா நகரில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி(62). அவரது கணவர் இறந்த பிறகு இவர்  தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் முருகன் அருகில் வாடகை வீட்டில் தங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜேஸ்வரி வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த  அங்கு வந்த மீட்பு படையினர் ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube