இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது  – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார்.அங்கு இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது . பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருப்பதால் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த முடியும் என்று  பிரதமர் மோடி பேசினார்.