கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் பதவி விலகல் !

கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் பதவி விலகல் !

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவின் ஜாக்காலிஸ்  இருந்தார்.இந்நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து யோசித்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

மேலும் உதவி பயிற்சியாளராக இருந்த சைமன் கோடிசும் விலகிஉள்ளார்.புதிய  பயிற்சியாளர் கொல்கத்தா அணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.இது குறித்து ஜாக்காலிஸ்  கூறுகையில் , வீரர் ,ஆலோசகர் , மற்றும் பயிற்சியாளர் என கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணி உடன் எனது பயணம் சிறப்பு மிக்கது.

இது புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டிய நேரமாகும்.இந்த தருணத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ,நிர்வாகிகள் ,வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube