கடவுளின் கோபத்திற்கு நாம் தான் காரணமா இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேசிய நடிகர் விஷ்ணுவிஷால்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களது ஆறுதல்களையும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும்  ட்விட்டரில் சில மனிதர்களின் மனிதாபிமானம் மற்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இந்த சம்பவம் எனக்கு மிக பெரிய  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்விட்டரில் கூறியிருந்தார்.

மற்றோரு பதிவில் ” தெய்வங்களுக்கு என்ன ஆனது, எங்கே அவர்கள்?, அவர்களின் கோபத்திற்கு நாம் தான் காரணமா என்றும் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment