தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் என்னை ஒருமுறை தாக்கினார்கள் என்று ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆட்டோ ஓட்டுநர் கதிர் பெட்ரோல் ,டீசல் விலை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசுகையில் தாக்கப்பட்டார்.இதன் பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆட்டோ ஓட்டுநர் கதிருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கதிர் தற்போது தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் என்னை ஒருமுறை தாக்கினார்கள்.அதேபோல் பாஜகவினர் தாக்கியது தமிழிசைக்கு தெரியாது. அவர்கள் தாக்கியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக நேரில் சந்தித்த தமிழிசை கூறினார் என்று ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.