மீலாது நபி ! தலைவர்கள் வாழ்த்து

மீலாது நபி திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்த வாழ்த்து செய்தியில், முகமது நபி பிறந்த நாளையொட்டி இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து  செய்தியில்,  நபிகள் நாயகத்தின் எண்ணங்களான நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு அதிகரிக்கட்டும், சமுதாயத்தில் அமைதி நிலவட்டும் என்று தெரிவித்துள்ளார்.