அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்!திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு  காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர். அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நேற்று  அத்திவரதர் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள  தலைமை  செயலகத்தில் அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.மேலும்  அன்னதான திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். அத்திவரதர் கோவிலில் அன்னதானம் வழங்க பொதுமக்களும் நன்கொடை வழங்கலாம் எனவும்  அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.