வீடியோ :வகுப்பறையில் குறுக்கே பேசியதால் மாணவனை சரமாரியாக தாக்கிய பேராசிரியர்!

தெலுகானாவின் ஜேக்டியல் பகுதியில் உள்ள தனியார் சாந்தி ஜூனியர் கல்லூரி இயக்கி வருகிறது.இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவில் மனோஜ் என்ற மாணவன் படித்து வருகிறார்.

முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவிற்கு பேராசிரியர் சித்தி ராஜி என்பவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவிப்பு குறித்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனோஜ் குறுக்கிட்டு சீக்கிரமாக பேசி முடிக்கும் மாறு கூறி

உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் சித்தி ராஜி மாணவர் மனோஜை சரமாரியாக தாக்கினார்.ஏந்தி தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.மேலும் மனோஜ் சகோதரர் பேராசிரியர் சித்தி ராஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் பேராசிரியர் சித்தி ராஜி  மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

author avatar
murugan