பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது- ராமதாஸ்

பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது- ராமதாஸ்

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது  என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழாவில்,ரூ.75 நாணயத்தை பிரதமா் மோடி  வெளியிட்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், நாட்டில் பெண்களின் திருமண வயதை நிா்ணயிப்பது தொடா்பாக  பல விதமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக  ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவின் அறிக்கையின் நிலை என்ன என்று விளக்கம் கேட்டு, நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.இந்தக் குழு  அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர் பெண்களின் திருமண வயது தொடா்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.பெண்கள் உயர்கல்வி பெறவும், வாழ்க்கையில் சாதிக்கவும் இது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube