புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறாரா …!அமைச்சர் ஜெயக்குமார்

நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image result for அமைச்சர் ஜெயக்குமார்
இந்நிலையில்  இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பாஜகதான் பதில் சொல்ல வேண்டும். புயலால் 2 லட்சம் மின்கம்பங்கள் உலகத்திலேயே எங்கேயும் விழுந்திருக்காது. நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.பரீட்சைக்கு திடீரென படிப்பவர்கள்தான் வெற்றி கிடைக்குமா தோல்வி ஏற்படுமா என சந்தேகத்தில் இருப்பார்கள்; அதிமுக-வை பொறுத்தவரை படித்துப் படித்து ஊறியவர்கள், எனவே தேர்வை நினைத்து கவலைப்படுவதில்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment