நம் ஆரோக்கியத்தை காக்கும் சக்தி….!!! நம்ம கையிலேயே இருக்குங்க…!!!

நமது வீடுகளில் எந்த மரம் இருக்குதோ, இல்லையோ முருங்கைமரம் மட்டும் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இந்த மரம் பல மருத்துவ குணங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகிறது. இந்த மரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.

Image result for முருங்கை கீரை

பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. வலி நிவாரணியாக விளங்குவதுடன் வீக்கத்தை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. முருகங்கை கீரையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு சத்தூட்டம் தரும் பானம் தயாரிக்கலாம்.

Related image

 

தேவையான பொருட்கள்:

  • முருங்கை கீரை
  • பால்
  • பனங்கற்கண்டு

செய்முறை:

Image result for முருங்கை கீரை பால் பனங்கற்கண்டு

காம்பு நீக்கிய துளிர் முருங்கை கீரையை பசையாக்கி அதிலிருந்து சுமார் 30 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதையடுத்து, காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை வடிகட்டி தினமும் ஒருவேளை கொடுத்துவர குழந்தைகளின் எலும்பு, நரம்பு பலமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும். தோலுக்கு பயன்தருவதுடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வலி நிவாரணி :

இதை இளம்தாய்மார்கள் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பியாக விளங்குகிறது. பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, இரும்பு, கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டுள்ளது. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை கீரையை மேல்பற்றாக போடும்போது வலி நிவாரணியாகிறது.

Image result for வலி நிவாரணி :

பாலோடு சேர்த்து கொடுக்கும்போது எலும்புகளுக்கு பலம் தருகிறது. உப்போடு சேர்த்து சாறாக கொடுக்கும்போது நெஞ்சக சளியை வெளியேற்றுகிறது. நாவில் உண்டாகும் புண்கள், வாய் துர்நாற்றத்தை போக்கும் தினமும் ஒருபிடியாவது சேர்த்துக்கொள்ள பல நோய்களை போக்கும் கீரை என்பதில் சந்தேகம் இல்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment