ரூ.1000 பொங்கல் பரிசு -இன்றும் வழங்கப்படுகிறது

  • பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
  • தமிழகத்தில்  இன்றும்  பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கடந்த 9-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு  வழங்கப்பட்டுவருகிறது.மேலும் நாளையும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.