துபாயில் போலீசை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட போலீஸ் ரோபோ

துபாயில் உள்ள நகரங்களை கண்காணிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற் கும், தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ரோபோவில் பொதுமக்கள் அபராத தொகையை செலுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவில் பதிவாகும் தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும்.

ரோபோவின்  மார்பு பகுதியில் உள்ள Touch Screen மூலமாக சுற்றுலாப்பயணிகள் தேவையான தகவல்களை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரோபோ அராபிக் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறுபடியும் துபாயில் புதியதாக ஒரு போலீஸ் ரோபோ உருவாக்கபட்டு உள்ளது. இந்த ரோபோ போலீஸ் செய்கின்ற அனைத்து வேலைகளையும், போலீசால் முடியாது வேலையையும் இந்த ரோபோ செய்யும்.

2030-ம் ஆண்டுக்குள் துபாயில் உள்ள மொத்த போலீஸ் கட்டுப்பாட்டையும் இந்த ரோபோ வைத்து தன் இயக்க உள்ளதாக துபாய் அரசு அறிவித்து உள்ளது.

Leave a Comment