பிரியாணி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஸ்டூடியோ உரிமையாளர் ..!இளம் பெண் தற்கொலை ..!

  • மதுர என்பவரின் ஸ்டூடியோவில் 3 ஆண்டுகளாக தனலட்சுமி வேலை செய்து வந்து உள்ளார்.
  • கடந்த ஜனவரி முதல் தனலட்சுமிக்கு  பிரியாணி ,டீ ,காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
  • இது குறித்து தனலட்சுமி  தந்தையிடம் கூறியுள்ளார்.பின்னர்  திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்த நிலையில் மதுர திருமணம் ஆனவர் என்பதால் தனலட்சுமி தற்கொலை செய்து  கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் சுப்பையா நகரை சார்ந்தவர் தனலட்சுமி (31)இவர் +2 முடித்த இவர் மதுர என்பவரின் ஸ்டூடியோவில் 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்து உள்ளார்.கடந்த ஜனவரி முதல் தனலட்சுமிக்கு கொடுக்கும் பிரியாணி ,டீ ,காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

நாளடைவில் இந்த விவகாரம் தனலட்சுமிக்கு தெரியவர தனது தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார்.இதை தொடர்ந்து மதுரயை திருமணம் செய்ய  ஏற்பாடுகள் செய்த நிலையில் ஏற்கனவே மதுரவிற்கு திருமணம் ஆனது தெரியவர தனலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.

இதனால் தனலட்சுமி  சில நாள்களாக மனஉளைச்சலில் இருந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 03-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு மாஜிஸ்திரெட் வாக்குமூலம் பெற்றார்.அதில் முன்கூட்டியே ஏன் ..? இது பற்றி தெரிவிக்கவில்லை என கேட்டதிற்கு மதுரக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.நான் புகார் கொடுத்தால் அவரது குடும்பம் நாசமாகி விட்டும் என்பதால் புகார் கொடுக்கவில்லை என கூறினார்.

பாலியல் பலாத்காரம் ஆன நான் இன்னொருவருக்கு துரோகம் செய்யவிரும்பவில்லை அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தனலட்சுமி இறந்து விட்டார். புகார் பெற்ற போலீசார் மதுரவை தேடி வருகின்றனர்.

 

author avatar
murugan