பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்: குழு அமைத்த மத்திய அரசு

பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்கும் வகையில் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு குழு ஒன்று அமைத்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசினார். இந்தக் குழு அண்மையில் நடத்திய முதல் கூட்டத்தில் சட்ட மற்றும் உள்துறை அமைச்சகத்தை சார்ந்த பிரதிநிதிகள் இது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ளனர்  என்று தெரிவித்தார்.