மாறி மாறி கடித்துக்கொண்டு இறந்த முதியவரும் ,பாம்பும்!

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா  கிராமத்தை சேர்ந்த பார்வத் காலா பாரியா வயது (60). இவர் நேற்று முன்தினம் சோளம் ஏற்றுக் கொண்டு லாரியில்  சென்று கொண்டிருந்தபோது லாரியில் இருந்த பாம்பு ஒன்று திடீரென பார்வத் முகத்தில் அடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்வத் பதிலுக்கு பாம்பை கிடைத்துள்ளது. இதில் பாம்பு இறந்து உள்ளது.

கடித்த பாம்பு விஷ தன்மை கொண்டவை என்பதால் பார்வத்தை லுனவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பார்வத்திற்கு சிகிக்சை கொடுக்கப்பட்டது. பாம்பின் விஷம் உடல் முழுவதும் அதிகமாக பரவியதால் சிகிக்சை பலன் இன்றி இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan