தலைநகரில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது!

டெல்லியில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 91,312 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,344 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 91,312 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,411 ஆக அதிகரித்துள்ளது.  டெல்லியில் 19,155 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.