துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை..!

அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டு முறையாக கொரோனா பாதித்த பயணிகளை ஏற்றிச் சென்றதால் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை இன்று முதல் அக்டோபர் 3 வரை என துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த பயணிகளை  ஏற்றி வருவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என  துபாய் விமான போக்குவரத்து துறை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
murugan