நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மாணவர் உதித் சூர்யா சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தேனி மருத்துவ கல்லூரிக்கு புகார்  தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு  நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும்,  தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்தது..இதனால் சந்தேகத்தின் அடைப்படையில் அந்த மாணவர் குறித்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார் தேனி மருத்துவ கல்லூரியின் டீன் ராஜேந்திரன்.
இதன் பின்னர் அவர் மீது காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.மேலும் உதித் சூர்யாவை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர் . நீட் தேர்வில்  ஆள் மாறாட்டம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவர் உதித் சூர்யா சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், நீட் தேர்வில் 382 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் ,தேசிய அளவில் 6,704-வது இடத்தை பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தேனி மருத்துவக்கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.