காணாமல் போன குருவாயூர் கோயில் சங்கு கொரியரில் வந்தது!

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மிக பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலில் பூஜை செய்யும் போது சங்கு பயன்படுத்துவது வழக்கம்.சங்கை பயன்படுத்திய பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மேலாளர் அலுவலகத்தில் வைக்கப்படும்.அந்த சங்கு பக்தர்கள் கைக்கு எட்டும் அளவு தூரத்தில் தான் இருக்கும்.

இந்நிலையில் கடந்த மாதம் திடீர்ரென அந்த சங்கு காணாமல் போய்விட்டது.மயமான சங்கு கொரியர் மூலமாக கோவிலுக்கு வந்தது.அந்த கொரியரில் மன்னிக்க வேண்டும் என ஒரு கடிதமும் இருந்தது.

அந்த கொரியர் ஆந்திர மாநிலம் விஜயவாடா பதுதியில் இருந்து வந்து உள்ளது.கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் குழந்தைகள் யாராவது தெரியாமல் சங்கை எடுத்து இருக்கலாம்.அதை வீட்டில் சென்று பார்த்த பெற்றோர்கள் இறைபக்தியால் சங்கை திருப்பி அனுப்பி இருக்கலாம் என கோவில் அதிகாரிகள் கூறினார்.

author avatar
murugan