பால் வியாபாரி மகன் இந்திய அணியின் கேப்டன்..!

பால் வியாபாரி மகன் இந்திய அணியின் கேப்டன்..!

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கேப்டனாக பிரியம் கார்க்  கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர்கேப்டனாக  தேர்வு செய்ய காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற  ராஞ்சி கோப்பையில் ஒரு இரட்டை சதம் , 2 சதங்கள் மற்றும் 5 அரை சதம் விளாசி மொத்தம் 867 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் தந்தை நரேஷ் உத்தரபிரதேசத்தில்  வீட்டுக்கு வீடு பால்  வியாபாரம் செய்தும், பள்ளி மற்றும்  சரக்கு வாகனங்களை ஓட்டி  இவருடைய எதிர்காலத்திற்காக உழைத்தாக  கூறியுள்ளார்.

2011ஆ-ம் ஆண்டு இவர் தாய் இறந்த பிறகு தந்தையின் முழு கவனத்தில் மீரட்டில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தன்னுடைய வீட்டில் டிவி இல்லாத போது சச்சின் போட்டி பார்ப்பதற்க்கு அருகிலுள்ள ஷோரூம் சென்று மற்றவர்களை போல இடித்து தள்ளிக்கொண்டு போட்டியை கண்டதாகவும் அது மலரும் நினைவுகள் என கூறினார்.

தந்தையின் கனவுக்காக  தான் சாதிக்க வேண்டும். இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube