உறவினர் வீட்டிற்குள்ளேயே பின்புறமாக நுழைந்து விளக்கை அணைத்துவிட்டு பலாத்காரம் செய்ய முயன்ற நபர்!பின்னர் நடந்த விபரீதம்!

உறவினர் வீட்டிற்குள்ளேயே பின்புறமாக நுழைந்து விளக்கை அணைத்துவிட்டு பலாத்காரம் செய்ய முயன்ற நபர்!பின்னர் நடந்த விபரீதம்!

  • தனது உறவினர் வீட்டிற்குள் பின்புறமாக நுழைந்து விளக்கை அனைத்து விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்.
  • வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கிய அக்கம்பக்கத்தினர்.பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாண்டிச்சேரி என்றழைக்கப்படும் புதுச்சேரியில் உள்ள பெரிய கோட்டக்குப்பம் காலனியை  சேர்ந்தவர் முருகன் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த 10 -ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகனின் உறவினர் பெண் ஒருவர் இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது வீட்டின் தோட்டத்தின் வழியாக முருகன் நுழைந்துள்ளார்.

பின்னர் மின் விளக்கை அனைத்த முருகன் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர்.

அப்போது தப்பிக்க முயன்ற முருகனை வளைத்து பிடித்து சரமாரியாக தங்கியுள்ளனர்.பின்னர் சம்பவம் காரணமாக காவல்துறையினர்க்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் முருகனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube