பட வாய்ப்பிற்காக பலர் படுக்கைக்கு அழைப்பதாக கூறிய மலையாள நடிகை!

சமீபகாலமாகவே பிரபல நடிகைகள் பலர் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றன.அதன் அடிப்படையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் காயத்ரி சுரேஷ்.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் நடித்து வரும் 4 ஜி படத்தில் நடித்துவருகிறார்.இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அந்த படம் குறித்து அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.அப்போது அவர் சிலர் அவரை தொடர்பு கொண்டு தயாரிப்பாளரின் ஆசைக்கு இணங்கினால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாக கூறியுள்ளார்.

மேலும் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு தயாரா ?என கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்பியதாகவும் அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.அவ்வாறு பதில் அனுப்பினால் கண்டிப்பாக உரையாடல் தொடரும் நான் பதில் அனுப்பினால் இருந்தால் என்னுடைய எண்ணம் என்னவென்று புரிந்து கொள்வார்கள் என கோவமாக தெரிவித்துள்ளார்.